உள்ளூர் செய்திகள்

ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கல்

Published On 2022-09-19 07:03 GMT   |   Update On 2022-09-19 07:03 GMT
  • ராம்கோ நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகிேயார் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

ராஜபாளையம்

ராம்கோ நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடமும் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சுமார் 1,905 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையாக ரூ.42 லட்சம் பெற்றனர். விழாவில் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

தொழிற்சங்கத்தின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் என்.கண்ணன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர். கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News