உள்ளூர் செய்திகள்

தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஒரு மாணவிக்கு சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2022-09-07 08:14 GMT   |   Update On 2022-09-07 08:14 GMT
  • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். மேலும் விரைவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக ணிணியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே மாணவ- மாணவிகள் அனை வரும் கல்வியின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆதி நாராயணன், தலைவர் ராமசாமி, பொருளாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, கிளை செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News