ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
5 ஆண்டுகளுக்கு பின் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்குப் பின் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க்க கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலர் வராததால் விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்கம் மைய அலுவல கத்தில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட் டம் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதி களான ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளை யம் பகுதி விவசாயிகள் வனத்துறை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வழியின்றி சிரமத்தில் இருந் தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், வனத்துறை சார்பில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் வெளி யிட்ட அரசாணையில் விவ சாயிகள் விளைநிலங்களில் மின் வேலி அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெறு வது கட்டாயம் என அறிவித் தது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்த னர்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வன துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் அடங்கிய முத் தரப்பு கூட்டம் நேற்று வன விரிவாக்க மையத்தில் நடத் தப்படும் என தெரிவித்தார். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மை யத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். 12 மணிக்கு ஆர்.டி.ஒ விஸ்வநாதன், வட்டாட் சியர் செந்தில்குமார், உதவி வன அலுவலர் நிர்மலா உள்ளிட்டோர் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட வன அலுவலர் கூட்டத்திற்கு வராததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் மாவட்ட வன அலுவலரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலரை இடமாற் றம் செய்ய வேண்டும், வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாதம் தோறும் வனத்துறை சார் பில் கூட்டம் நடத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா கூறுகையில்:-
விளை நிலங்களில் மின் வேலி அமைப்பதற்கு வனத் துறை அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை, காட்டு மாடு, காட்டு பன்றி, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப் படுத்துவதால் விவசாயி களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து முறையிடு வதற்கும், கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் வனத் துறை அதிகாரிகளை விவ சாயிகளால் எளிதில் தொடர்பு கொள்ள முடிய வில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் வனத்துறை, வருவாய், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு கூட்டம் 26-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகம் வந்துள்ளோம். ஆனால் அரசு அதிகாரிகளையும் விவசாயிகளையும் மதிக்காத மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் கூட்டத்திற்கு வரவில்லை. அதை கண் டித்து விவசாயிகள் கூட்டத் திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் பதவியேற்றதில் இருந்து விவசாயிகள் குறை தீர்க்க கூட்டம் நடத்த படவில்லை. விவசாயி களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட வன அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டதால், வனத் துறை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.