உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-20 08:23 GMT   |   Update On 2023-05-20 08:23 GMT
  • விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் மின்பகிர்மான மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் ஆகிய தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாநில இணை செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் திட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், பெடரேசன் மாநில உப தலைவர் திட்டச் செயலாளர் ஞானகுரு, இளங்கோவன் ஆகியோர் பேசினர்.

கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 1.12.2019க்குப் பின் பணியில் சேர்ந்த 9,500 கேங்மேன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணப்ப லன்கள் வழங்காதது, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு உத்தரவாதம் தரப்படாதது, ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினமும் ரூ.480 ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்க படாதது ஆகியவற்றை கண்டித்தும், துப்புரவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News