உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசியில் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. தி.மு.க. 6-வது பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பிரிவு இணைச்செயலாளரும், திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், சேவுகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.