உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-11 14:11 IST   |   Update On 2023-04-11 14:11:00 IST
  • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் காந்திராஜீ தலைமை தாங்கினார்.

செயலாளர் அந்தோணிராஜ் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியாண்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகி சீராளன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் பேசினர்.

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் நிறைவுரை ஆற்றினார்.

அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார். செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிப்பதாக கூறி அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News