உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published On 2023-04-17 12:44 IST   |   Update On 2023-04-17 12:44:00 IST
  • ராகுல்காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
  • ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து, ராஜபாளையத்தில் போராட்டம் நடந்தது.

ரெயில் மறியல் செய்வதற்காக மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில், நகர தலைவரும் கவுன்சிலருமான ஆர்.சங்கர் கணேஷ் முன்னிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வழக்கறிஞர் காளிதாஸ், டைகர் சம்சுதீன், சேவாதளம் பச்சையத்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியராஜ், சாத்தூர் அய்யப்பன் வட்டார தலைவர்கள் கணேசன், லட்சுமணன், பாலகுருநாதன், கார்த்திக், கணேசன், பவுல்ராஜ், செல்வகனி, சுப்ரமணி, முருகராஜ், ஜெயக்குமார், நட்சடலிங்கம், கர்ணன், சுந்தரம், ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் ராஜாராம், சாமி உள்பட சுமார் 150 பேர் ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.

ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் ரெயில்வே பீடர் ரோடு மினிரவுண்டானாவில் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.

Tags:    

Similar News