உள்ளூர் செய்திகள்

கஞ்சா-புகையிலை பறிமுதல்; 7 பேர் கைது

Published On 2022-11-19 14:06 IST   |   Update On 2022-11-19 14:06:00 IST
இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த கோமதிசங்கர்(47), பாண்டி(31) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மேற்கு போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது சின்னையா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வசந்த்(22), மதுரை பிச்சம்பட்டியை சேர்ந்தமகேஷ்(19) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தூர் டவுன் போலீசார் சங்கரநத்தம் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாத்தூர் தில்லை நகரை சேர்ந்த காளிராஜ்(27), எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்த கார்த்திக்(20), ஹேமந்த்(24) 3 பேரை மறித்து சோதனையி ட்டபோது 18 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும். 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News