உள்ளூர் செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி

Published On 2023-08-01 06:35 GMT   |   Update On 2023-08-01 06:35 GMT
  • ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
  • வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது42), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

அருப்புக்கோட்டை பந்தல்குடி மெயின் ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்ப சாமி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஜீவாநகர் திருமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது40). இவர் சம்ப வத்தன்று உறவினர்களுடன் குற்றாலம் சென்று விட்டு வேனில் அருப்புக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் கோவில்-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது வேனின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து அருப்புக் கோட்டை போலீசார் விசா ரணை நடத்தி வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News