உள்ளூர் செய்திகள்

கலைதிருவிழா தொடக்க நிகழ்ச்சி

Published On 2022-12-01 08:21 GMT   |   Update On 2022-12-01 08:21 GMT
  • ராஜபாளையத்தில் கலைதிருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
  • தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகு தியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கலைத்திருவிழா நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமையில் நடந்தது. இதில் தனுஷ்எம்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், வட்டார அளவிலுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பின் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றி பெறும் 200 மாணவ- மாணவிகளை வெளி நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். இந்தியாவிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது தமிழக முதல்வர் தான் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News