உள்ளூர் செய்திகள்

பெரிய பெருமாள் கோலத்தில் அருளிய ஆண்டாள்

Published On 2023-01-13 08:49 GMT   |   Update On 2023-01-13 08:49 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.
  • இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

வைணவ திவ்ய தேசங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் பெருமாள் மோகன அலங்காரத்தில்(நாட்சியார் திருக்கோலம்) எழுந்தருள்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்க மன்னாரை கரம் பிடித்தார். அதனால் இங்கு நடைபெறும் எண்ணெய் காப்பு உற்வசத்தில் கள்ளழகர், கண்ணன், பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் காட்சி அளிப்பார்.

அதன்படி நேற்று 5-ம் நாள் எண்ணெய் காப்பு உற்சவத்தில் பெரிய பெருமாள் கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீராட்ட மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டு, திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.

Tags:    

Similar News