- ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம். ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.
குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.