உள்ளூர் செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்

Published On 2023-03-20 08:08 GMT   |   Update On 2023-03-20 08:08 GMT
  • சிவகாசி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் தெரிவித்தார்.
  • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் சாமி நத்தம் காலனியை சேர்ந்த வர் பூமிநாதன் என்ற புவனே சுவரன். இவரது மனைவி சந்தனமாரி (வயது 20). இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான்.

கடந்த சில மாதங்களாக பூமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனமாரியின் தாய் முத்துலட்சுமி மகள், பேரனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. சிலமணி நேரம் கழித்து பூமிநாதன் அங்கு வந்து கதவை திறந்தார். அப்போது முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரு அறையில் சந்த னமாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சந்தனமாரி ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர் பாக மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்ப தாக முத்துலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News