உள்ளூர் செய்திகள்

திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் திடீர் மாயம்

Published On 2023-02-17 08:23 GMT   |   Update On 2023-02-17 08:23 GMT
  • திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் திடீர் மாயமானார்கள்.
  • சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகர்

கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது36). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் விமரிசையாக நடந்தது. புதுமண தம்பதியர் விருந்துக்காக சிவகாசி வந்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத் தன்று உறவினர்களுடன் வெளியே சென்ற தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வரன் மற்றும் குடும்பத்தினர் தேவியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்து விக்னேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகப்பிரியா(20). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரு கிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுகப்பிரியா திடீரென மாயமானார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். சாத்தூர் ஒரிஜினல் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் வெற்றி ஈஸ்வரன். தற்காலிக மின் ஊழியரான இவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News