உள்ளூர் செய்திகள்

காதலருடன் இளம்பெண் மாயம்

Published On 2023-09-16 06:47 GMT   |   Update On 2023-09-16 06:47 GMT
  • காதலருடன் இளம்பெண் மாயமானார்.
  • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அர்ச்சனாதேவி(வயது20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் அழகர்சாமிக்கு செல்போனில் அழைத்து அர்ச்சனாதேவி தன்னுடன் இருப்பதாகவும் தேட வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்பு அர்ச்சனாதேவி போன் செய்து தன்னை தேடவேண்டாம் என கூறிவிட்டு செல்போனை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு அழகர்சாமி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழைய டெலிபோன் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் பாலசங்கீதா(25). வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் நேரு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News