அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் புகுந்த பாம்பு
- திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் பாம்பு புகுந்தது.
- மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.
மேலும் இந்த அரசுப் பள்ளி காட்டு பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விஷசந்துகள் வரு வது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவ, மாணவியர் படித்து கொண் டிருந்தனர். அப்போது பள்ளிகூடத்தின் கேட் பகுதி வழியாக சுமார் நான்கரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் நுழைந்தது.
இதனை கண்ட மாணவர் கள் கூச்சிலிட்ட நிலையில் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக திருச்சுழி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ் வரன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் பள்ளிக்கூடத்தின் கழிவறை பகுதிக்குள் நுழைந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டு பகுதியில் விட்டனர்.
மேலும் மாணவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே சாரை பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.