உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-07-17 09:14 GMT   |   Update On 2023-07-17 09:14 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புஷ்பகலா (வயது 23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

சம்பவத்தன்று வேல்முரு கன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத் தில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பகலாவை தேடி வருகின்றனர்.

விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் முத்துசங்க ரன் (36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி முத்துமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணன்கோவில் உதயா நகரை சேர்ந்தவர் நஜூமுதீன். இவரது மகன் பசீல்ரகீம். இவர் வெளியூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் நஜூமுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News