- மதுரை அருகே சிறுமி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி முத்துப்பாண்டி (30). இவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூ ரணிக்கு வசிப்பதற்காக வந்தனர். இவர்களுக்கு மாரீஸ்வரி(11), என்ற மகளும், ருத்ரபாண்டி என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் அச்சகத்திலும், மனைவி முத்துபாண்டி அருகில் உள்ள குழாய் நிறுவனத்தி லும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரீஸ்வரிக்கு பழைய பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வாங்காததால் பள்ளியில் சேர்க்க முடிய வில்ைல. இதனால் அவர் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாரீஸ்வரி தூக்கில் தொங்கியபடி கிடந்தாள். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது43). இவரது மனைவி தவசெல்வி. இவர்கள் ஏழாயிரம்பண்ணை தெற்கு தெருவில் வசித்து வரு கின்றனர். மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மகேந்திரன் அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவசெல்வி கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காளியம்மாள் ெதருவை சேர்ந்தவர் அழகர்சாமி(38), ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமண மாகாததால் மன விரக்தியில் இருந்த அவர் குடிப ழக்கத்திற்கு அடிமை யானார். சம்பவத்தன்று வீட்டின் மாடிப்படியில் இருந்து இறங்கி வரும்போது ரத்த வாந்தி எடுத்தார்.
அதை பார்த்த அவரது தந்தை சடையப்பன் அதிர்ச்சியடைந்து விசாரித்தார். அப்போது விஷம் குடித்து விட்டதாக அழகர்சாமி கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுரை தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சடையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.