உள்ளூர் செய்திகள்
- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை செலுத்த முடியாததால் முனியசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தினேஷ் (29). இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர் அச்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகன் கணேஷ்குமார் (22). சம்பவத்தன்று பெற்றோர் கண்டித்ததால் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.