உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2023-06-17 08:05 GMT   |   Update On 2023-06-17 08:05 GMT
  • மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
  • ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக ராஜபாளையம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனிவாச பெருமாள் துணை சூப்பிரண்டு பிரீத்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் ராஜ பாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது தனியார் பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றுகொண்டி ருந்தார். அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில ளித்தனர். பின்னர் அந்த இடத்தில் சோதனையிட்ட போது 30 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கருப்பசாமி (60) என்பது தெரியவந்தது.

அதேேபால் தவ வனபுரம் போலீசார் நேற்று இரவு புத்தூர் இனாம்கோவில் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது ஜெய் சங்கர்(39) மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. அப்போது அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News