உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்

Published On 2022-10-07 08:12 GMT   |   Update On 2022-10-07 08:12 GMT
  • குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே தென்கரையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கற்பகம்(22). இவரும் தென்கரை நடுத்தெருவை சேர்ந்த சங்கிலிபாண்டி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கற்பகம் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்ற கற்பகம் மாயமாகிவிட்டார்.

பெண் மாயம்

இதுபற்றி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கற்பகம் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது மனைவி அனுசியாதேவி(24). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் காரியாபட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது ஒரு குழந்தையுடன் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் சாந்தி காரியாப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாதேவி மற்றும் அவரது குழந்தையை தேடி வருகின்றனர்.

வாலிபர் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் தீர்த்தங்கன்(24). கட்டிடத் தொழிலாளி. இவர் சென்னையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தந்தை சிவபிரகாஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News