உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் திடீர் மாயம்

Published On 2022-08-06 14:29 IST   |   Update On 2022-08-06 14:29:00 IST
  • கல்லூரி மாணவி உள்பட 2 பேர் திடீர் மாயமாகினர்.
  • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் ராஜா. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியதர்ஷினி நேற்று வழக்கம்போல ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் திரவுபதி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாயமான கல்லூரி மாணவி எங்கு சென்றார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகள் முத்துமணி (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். முத்து மணி தனது தந்தை சுப்பிரமணியன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற முத்துமணி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் சுப்பிரமணி தேடினார். திடீரென இரவு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட முத்துமணி தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துவிட்டு செல்போனை துண்டித்து விட்டார்.

இதனால் தனது மகள் எங்கு இருக்கிறார்? என்று தெரியாத சுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துமணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News