உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம நிர்வாக உதவியாளர் பலி

Published On 2023-08-03 09:37 GMT   |   Update On 2023-08-03 09:37 GMT
  • வீராசாமி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார்.
  • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 46). இவர் வலசை கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்து பணியை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 

அப்போது மோட்டார் சைக்கிள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீராசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News