உள்ளூர் செய்திகள்
ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. சந்திப்பு
- சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க கேட்டுக்கொண்டார்
- கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தார்.
சென்னை:
சென்னையில் ரயில்வே துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை இயக்குனர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தார்.
சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள், ரயில்வே நிலையங்களின் மேம்பாடு, ரயில் நிறுத்தங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார் விஜய் வசந்த்.