உள்ளூர் செய்திகள்

துணைத் தலைவர் குற்றச்சாட்டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Published On 2022-06-29 10:43 GMT   |   Update On 2022-06-29 10:44 GMT
  • ஊட்டி நகரசபை கூட்டம் நடைபெற்றது
  • வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊட்டி நகரசபை கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் ஆணையாளர் காந்திராஜன், , துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதங்கள் வருமாறு:

ஜாா்ஜ் (திமுக): ஊட்டியில் கேளிக்கை பூங்காக்கள் முறையான அனுமதியுடன் இயங்குகிறா என ஆய்வு செய்ய வேண்டும்.

முஸ்தபா (திமுக): சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஒரு தனியாா் ஓட்டலின் மேற்புறம் உள்ள கட்டிடம் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அபுதாகீா் (திமுக): மத்திய பஸ் நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீா் தேங்குகிறது. நகராட்சி பணியாளா்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

ஆணையா்: பணியாளா்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்பி இஸ்மாயில்(திமுக): நகராட்சியில் காந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்கபை ழிவுகள் முறையாக அள்ளப்படுவதில்லை.

கீதா (திமுக): நகராட்சியில் குப்பைகள் அகற்றுவது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகளை நகராட்சிப் பணியாளா்கள் சரிவர மேற்கொள்வதில்லை.ஆணையா்: கவுன்சிலா்கள் தெரிவிக்கும் பணிகளை சரியாக செய்யாவிட்டால் நகராட்சிப் பணியாளா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவாா்கள்.

அனிதா (திமுக): வண்ணாரப்பேட்டை கால்வாயை தூா்வார வேண்டும்.செல்வராஜ் (திமுக): தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டதால் திறந்தவெளி சாக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் தனியாா் நிலங்களில் உள்ள புதா்களை அகற்ற வேண்டும். குமாா்(அதிமுக):

வாா்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் உள்ள நிலையில், நகராட்சி கட்டிடத்தை சீரமைக்கும் பணிகளை கைவிட வேண்டும்.ராஜேஷ்வரி பாபு (காங்): மரவியல் பூங்கா பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். நகராட்சி கடைகள் ஏலம் குறித்து கவுன்சிலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அன்பு (திமுக): வாா்டு வரையறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

ரஜினிகாந்த் (காங்): கன மழை பெய்யும்போது சேரிங்கிராஸ் மற்றும் கீரின்பீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில்

துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா் பேசுகையில், ஊட்டி படகு இல்லத்தை தோண்டி ஆழப்படுத்த வேண்டும். கோடப்பமந்து கால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாக பராமரிக் கப்படாத தால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்த விதமான வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா்கள் அக்கீம்பாபு, லயோலோ குமார், அன்பு செல்வன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பிற கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனா். இதன் பின்னா் நகராட்சி கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News