search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilors debate"

    • 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
    • மன்ற கூட்டத்தில் ஏன் தீர்மானம் வைக்கப்படவில்லை?

    காடையாம்பட்டி

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஸ்வரி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ரமேஷ் (அதிமுக)- பண்ணபட்டி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து இடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் தொட்டியை இடித்து விட்டால் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்து மன்ற தீர்மானம் பெற்று தந்தால் சிறப்பு நிதி ஒதுக்கி தருவதாக தெரிவித்தனர். இது குறித்து மன்ற கூட்டத்தில் ஏன் தீர்மானம் வைக்கப்படவில்லை?

    மாரியம்மாள் (ஒன்றிய குழு தலைவர்)- என்னிடம் தீர்மானம் வைத்துக் கொடுக்க கேட்காததால் வைக்கவில்லை.வெங்கடேசன் (அதிமுக)- கொங்குபட்டி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து பல மாதமாக இடித்து அகற்றி கொடுக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ரவிச்சந்திரன் (வட்டார வளர்ச்சி அலுவலர்)- நிதிபற்றாக்குறை உள்ளதால் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட முடியாத நிலையில் பழுதடைந்ததை கணக்கெடுத்து கொடுத்தால் அதிகாரிகளை பார்த்து சிறப்பு நிதி பெறலாம்.

    சாமுராய் குரு (விடுதலை சிறுத்தைகள் கட்சி)- காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஒப்பந்ததா ரர்கள் சங்கம் ஆரம்பித்து கொண்டு அவர்கள் சங்கம் மூலம் தான் வேலை கொடுக்க வேண்டும் என்கின்றனர். அவ்வாறு கொடுத்த பணியை விரைவாக முடிப்பதில்லை. சங்கத்திற்கு இங்கு வேலை இல்லை. கவுன்சிலர்களும் அதிகாரிகளும் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். வேறு எங்குமே சங்கம் இல்லை. இதற்கு அதிகாரிகள் அவர்களுக்கு செவி சாய்க்கக் கூடாது.

    பழனிவேல் (திமுக)- ஒன்றிய நிதியில் கொசு மருந்து அடிக்க சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள்? மருந்து அடிக்கிறார்களா? இல்லையா? என்பது கூட தெரிவதில்லை.ராமச்சந்திரன் (வட்டார வளர்ச்சி அலுவலர்)- கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் அங்குள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடம் கையொப்பம் பெற்று வரும்படி கூறிவிடலாம்.இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

    • ஊட்டி நகரசபை கூட்டம் நடைபெற்றது
    • வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி நகரசபை கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் ஆணையாளர் காந்திராஜன், , துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதங்கள் வருமாறு:

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டியில் கேளிக்கை பூங்காக்கள் முறையான அனுமதியுடன் இயங்குகிறா என ஆய்வு செய்ய வேண்டும்.

    முஸ்தபா (திமுக): சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஒரு தனியாா் ஓட்டலின் மேற்புறம் உள்ள கட்டிடம் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அபுதாகீா் (திமுக): மத்திய பஸ் நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீா் தேங்குகிறது. நகராட்சி பணியாளா்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

    ஆணையா்: பணியாளா்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தம்பி இஸ்மாயில்(திமுக): நகராட்சியில் காந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்கபை ழிவுகள் முறையாக அள்ளப்படுவதில்லை.

    கீதா (திமுக): நகராட்சியில் குப்பைகள் அகற்றுவது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகளை நகராட்சிப் பணியாளா்கள் சரிவர மேற்கொள்வதில்லை.ஆணையா்: கவுன்சிலா்கள் தெரிவிக்கும் பணிகளை சரியாக செய்யாவிட்டால் நகராட்சிப் பணியாளா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவாா்கள்.

    அனிதா (திமுக): வண்ணாரப்பேட்டை கால்வாயை தூா்வார வேண்டும்.செல்வராஜ் (திமுக): தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டதால் திறந்தவெளி சாக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் தனியாா் நிலங்களில் உள்ள புதா்களை அகற்ற வேண்டும். குமாா்(அதிமுக):

    வாா்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் உள்ள நிலையில், நகராட்சி கட்டிடத்தை சீரமைக்கும் பணிகளை கைவிட வேண்டும்.ராஜேஷ்வரி பாபு (காங்): மரவியல் பூங்கா பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். நகராட்சி கடைகள் ஏலம் குறித்து கவுன்சிலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அன்பு (திமுக): வாா்டு வரையறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

    ரஜினிகாந்த் (காங்): கன மழை பெய்யும்போது சேரிங்கிராஸ் மற்றும் கீரின்பீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில்

    துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா் பேசுகையில், ஊட்டி படகு இல்லத்தை தோண்டி ஆழப்படுத்த வேண்டும். கோடப்பமந்து கால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாக பராமரிக் கப்படாத தால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்த விதமான வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றாா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா்கள் அக்கீம்பாபு, லயோலோ குமார், அன்பு செல்வன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பிற கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனா். இதன் பின்னா் நகராட்சி கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×