உள்ளூர் செய்திகள்
- யார்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் நாராயணி மருத்துவமனை எதிரே காலியாக உள்ள இடத்தில் மரத்தில் முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட பொது மக்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அரியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் பிணத்தை மீட்டனர்.
தூக்கில் தொங்கிய முதியவர் நீல நிற சட்டையும், காவி வேட்டியும் அணிந்து தாடி வைத்து இருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
அவரது சட்டை பாக்கெட்டில் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான மருந்து சீட்டுகள் இருந்தது. இதனால் இறந்து கிடந்தவர் ஆரணி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.