உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது

Published On 2023-03-01 15:37 IST   |   Update On 2023-03-01 15:37:00 IST
  • ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடக்கம்
  • மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத உள்ளனர்

வேலூர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-1 வகுப்புக்கு வருகிற 14-ந் தேதி முதல் ஏப்ரல்5-ந் தேதி வரையும் 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது.

தொடர்ந்து பொது தேர்வுக்கான பணிகளில் அரசு தேர்வுகள் இயக்குனரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 8 ஆயிரத்து 247 மாணவர்களும் 8,723 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் எழுத உள்ளனர்.

இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 81 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடந்தது. அனைத்து மையங்களிலும் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News