என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ்-2 செய்முறை தேர்வு"
- ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடக்கம்
- மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத உள்ளனர்
வேலூர்:
பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-1 வகுப்புக்கு வருகிற 14-ந் தேதி முதல் ஏப்ரல்5-ந் தேதி வரையும் 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து பொது தேர்வுக்கான பணிகளில் அரசு தேர்வுகள் இயக்குனரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 8 ஆயிரத்து 247 மாணவர்களும் 8,723 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் எழுத உள்ளனர்.
இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 81 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடந்தது. அனைத்து மையங்களிலும் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






