உள்ளூர் செய்திகள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

Published On 2023-05-03 13:34 IST   |   Update On 2023-05-03 13:34:00 IST
  • ஏராளமானோர் கலந்துகொண்டனர்
  • பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது

குடியாத்தம்:

குடியாத்தம் தங்கம் நகர், மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்க சட்ட ஆலோசகர் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணைஆட்சியர் எம்.கஜேந்திரன், தொழிலதிபர் எம்.எஸ்.நாகலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எல்.கமலவேணி, ஏ. பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு பூப்பல்லக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் குடியிருப்போர் நல சங்க செயலாளர் ஜி.லிங்கசாரதி, பொருளாளர் டி.கே.இளங்கோ, துணைத்தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News