உள்ளூர் செய்திகள்

மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டித்த காட்சி.

பஸ்சில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் அட்டகாசம்

Published On 2023-06-27 14:32 IST   |   Update On 2023-06-27 14:32:00 IST
  • சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்
  • தட்டி கேட்ட வாகன ஓட்டி மீது தாக்குதல்

வேலூர்:

வேலூர் பழைய பஸ் நிலை யத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக செல்லும் அரசு பஸ்களில் மாலைநேரத் தில் மாணவர்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக தெங்கால் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அள வுக்கு அதிகமான மாணவர் கள் தினமும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்கின் றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தெங்கால் சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கி கொண்டு மாணவர் கள் சென்றனர்.

காகிதப்பட்டறை வழியாக பஸ் சென்று கொண்டிருந்த போது, சாலையில் சைக்கி ளில் சென்று கொண்டிருந்த நபரை அச்சுறுத்தும் விதமாக மாணவர் ஒருவர் கையை ஓங்கி முதுகில் தட்டினார்.

அதனைக் கண்ட இருசக் கர வாகன ஓட்டி ஒருவர் மாணவர்களை தட்டி கேட்ட துடன், படிக்கட்டில் தொங் காமல் பஸ் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய் யும்படி கூறினார். பொதுமக்களின் அறிவு ரையை கேட்க பொறுமை இல்லாத மாணவர்கள், படிக்கட்டில் இருந்து குதித்து இரு சக்கர வாகன ஓட்டியை தாக்கினர்.

இதில் அந்த வாகன ஓட்டி காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டு அக்கம் பக்கத்தில் நின்ற பொதுமக்கள் கூடியவுடன் அந்த மாணவர்கள் வாகன நெரிசலுக்குள் புகுந்து ஓடி மறைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பா லத்துக்கு அடியில் பஸ்சை மறித்து, மாணவர்கள் அனை வரையும் பஸ்சின் உள்ளே சென்று பாதுகாப்பாக செல் லும்படி நடவடிக்கை எடுத்ததுடன், தொங்கிக்கொண்டு சென்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.

Tags:    

Similar News