உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-07-12 08:54 GMT   |   Update On 2023-07-12 08:54 GMT
  • குடும்ப தகராறில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

குடியாத்தம் செம்பேடு பூமணி நகரை சேர்த்தவர் இளையராஜா. இவரது மனைவி பேபி ஷாலினி (வயது 29). இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 11-ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேபி ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News