உள்ளூர் செய்திகள்

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு.

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்

Published On 2023-06-27 14:22 IST   |   Update On 2023-06-27 14:22:00 IST
  • தனியாக 10 படுக்கை வசதிகள் கொண்டது
  • கல்லூரி முதல்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறை சார்பில் நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது.

விழாவை கல்லூரி முதல்வர் பாப்பாத்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

அறுவை சிகிச்சை பிரிவு பொதுவாக அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளையும், நுன்கிருமி அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளையும் ஒரே வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது நுண்கிருமி நோயாளிகளால் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் நுண்கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்று தனியாக 10 படுக்கை வசதிகள் கொண்ட நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தலைவர் ராஜவேலு, மருத்துவ கண்காணிப்பாளர் ரதி திலகம், ஆர்.எம்.ஓ இன்பராஜ்,துறை பேராசிரியர்கள் லோகநாதன், கோமதி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News