உள்ளூர் செய்திகள்

ஆடி கிருத்திகை விழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-10 13:51 IST   |   Update On 2023-07-10 13:51:00 IST
  • வேலாடும் தணிகை மலையில் நடந்தது
  • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மூலைகேட், தார்வழி அருகே 1000 அடி உயரமுள்ள மலைமேல் அமர்ந்து இருக்கும் வேலாடும் தணிகை மலை பால முருகன் கோவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகின்றன. அதே போல் இந்த ஆண்டு வரும் மாதம் 8, 9-ந் தேதிகளில் ஆடிக்கி ருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய் வதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பாலமுருகன் கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பால முருகன் கோவில் அறக்கட் டளை நிர்வாக தலைவர் எஸ்.பி.கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் குமார், துணைசெயலாளர் பாலு, துணை பொருளாளர் சங்கர், நிர்வாக குழு உறுப் பினர்கள் சீனிவாசன், ராஜாராம், வெங்கடேசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செல்வ ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும். மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் எழுத்தர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News