குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
- இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
- தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
2023-2024-ம் கல்வியாண்டிற்க்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கீழ்காணும் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
30-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு. இதில் விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்
ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 9 மணி அளவில் முதற்கட்ட பொது கலந்தாய்வு அறிவியல் பாடப் பிரிவுகள்-
கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்.
ஜூன் மாதம் 5-ந்தேதி காலை 9 மணி அளவில் மொழி பாடப்பிரிவு கலந்தாய்வு- தமிழ் மற்றும் ஆங்கிலம்.
7-ந்தேதி காலை 9 மணி அளவில் கலை பாடப்பிரிவுகள்-
வரலாறு மற்றும் பொருளியல்.
ஜூன் மாதம் 8-ந் தேதி காலை 9 மணி அளவில் வணிகவியல் பிகாம் மற்றும் வணிக நிர்வாகவியல் பிபிஏ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் (மெயில்) குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் தொலைபேசி வாயிலாக சேர்க்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.