உள்ளூர் செய்திகள்
- பஸ் மீது நேருக்கு நேர் மோதியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சங்கரன்பாளைத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மகன் கோகுல் (வயது 21). இவர் நேற்று தொரப்பாடியில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காட்பாடியில் இருந்து சித்தேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
வேலூர் தொரப்பாடி அருகே பஸ் - மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கோகுல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.