உள்ளூர் செய்திகள்

தாத்தாவுடன் சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

Published On 2023-05-11 14:34 IST   |   Update On 2023-05-11 14:34:00 IST
  • டிப்பர் லாரி மோதியது
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் அருகே உள்ள நெல்வாய் கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமான்.

இவருடைய மகன் குகன் (வயது 8). அடுக்கம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.

நேற்று அவரது தாத்தா தனபால் என்பவருடன் சைக்கிள் சப்தலிபுரம் அல்லி வரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது.

இதில் சிறுவன் குகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குகன் பரிதாபமாக இறந்தான்.

பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News