search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boy was killed"

    • டிப்பர் லாரி மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள நெல்வாய் கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமான்.

    இவருடைய மகன் குகன் (வயது 8). அடுக்கம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று அவரது தாத்தா தனபால் என்பவருடன் சைக்கிள் சப்தலிபுரம் அல்லி வரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிறுவன் குகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குகன் பரிதாபமாக இறந்தான்.

    பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானார்.
    • இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகம் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. மீனவர். அவரது மகன் விவன் (வயது 5).இவர் இன்று காலை திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவன் விவனை தேடினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இன்று காலை 9.30 மணி அளவில் பேட்ேடாடை பகுதியில் உள்ள கடற்கரையில் சிறுவன் விவன் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்து வேலு புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த சிறுவன் கடற்கரையில் விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

    ×