உள்ளூர் செய்திகள்
ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
- ெஜயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் சுதர்சன் (வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரவி (36). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இருவரும் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருவரிடமும் குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.