உள்ளூர் செய்திகள்

தோளப்பள்ளி ஊராட்சியில் நேற்று வேலைக்கு செல்லாமல் புறக்கணித்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்.

100 நாள் வேலை திட்ட ெதாழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணிப்பு

Published On 2023-07-15 09:13 GMT   |   Update On 2023-07-15 09:13 GMT
  • புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக தகவல்
  • தொழிலாளர்கள் கூலித்தொகையில் பாதி பணமும் கேட்பதாக குற்றச்சாட்டு

அணைக்கட்டு:

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 51 ஊராட்சிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் நடக்கிறது.

இதில் தோளப்பள்ளி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்கின்றனர்.

இவர்களிடம் பணித்தள பொருப்பாளர்கள் மிரட்டி பணி செய்யும் போது புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பணிக்கு வராத ஆட்களை வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் கூலித்தொகயைில் பாதி பணமும் கேட்பதாக, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தோளப்பள்ளி ஊராட்சிக்குபட்ட கடலை குளம் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்டம் நடைபெற இருந்தது.

அப்போது வேலை செய்வது போல் புகபை்படம் எடுக்க, தொழிலாளர்களை ரூ.20 தரும்படி பணித்தளப் பொருப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இதுபோன்று தவறுகள் இனிமேல் நடக்காது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அணைவரும் மீண்டும் ேவலைக்கு திரும்பி சென்றனர்.

இந்த சம்பவம் நேற்று தோலப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News