உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள மின் மீட்டரை மாற்ற வேண்டும்

Published On 2023-07-15 09:17 GMT   |   Update On 2023-07-15 09:17 GMT
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • அடிக்கடி தீப்பொறி மற்றும் மின் கசிவு ஏற்படுகிறது

அணைக்கட்டு:

வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிமேடு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. அதன்படி புலிமேடு வல்லாண்டப்பன் கோவில் செல்லும் வழியில் சின்டெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

அதன்அருகில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ்க்கு நீர் ஏற்ற மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. அந்தபகுதி மக்கள் தேவைப்படும் நேரத்தில் மட்டும், மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உபயோகிக்கின்றனர்.

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த மின் மீட்டர் பெட்டியின் கதவுகள், கடந்த சில மாதங்களாக உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி கிடக்கும் இந்த மின் மீட்டரில் அடிக்கடி தீப்பொறி மற்றும் மின்சார கசிவு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு, அதிகாரிகள் இந்த மின் மீட்டரை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Tags:    

Similar News