உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

Published On 2023-03-19 09:07 GMT   |   Update On 2023-03-19 09:07 GMT
  • பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் திருப்பதி, பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

யு.கே.ஜி. மாணவர்களை கே.ஜி. வகுப்பிலிருந்து அவர்களை அடுத்த கட்ட (முதலாம்) வகுப்பிற்கு வழி அனுப்பும் விதமாக எல்.கே.ஜி. மற்றும் பிரி-கே.ஜி. மாணவர்கள் நடனங்கள் மற்றும் நாடகம் மூலம் பிரியாவிடை அளித்து மகிழ்வித்தனர். யு.கே.ஜி. மாணவர்களும் தாங்கள் கே.ஜி. வகுப்புகளில் கற்ற அனுபவங்களை கலை நிகழ்ச்சியாக கற்காலத்தில் உருவாக்கப்பட்ட சக்கரத்தின் உதவியால் இயக்கப்பட்ட கட்டைவண்டி முதல் தற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் விண்கலம் வரை அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்துவதால் தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது குறித்தும், விண்வெளியின் முக்கியத்துவம் மற்றும் கோள்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் நாடகம் மற்றும் நடனம், உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவை கண்டு களித்தனர். சிறப்பு விருந்தினர் திருப்பதி யு.கே.ஜி. மாணவர்கள் 96 பேருக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் எலிசபெத் விழாவினை முன்னின்று வழிநடத்தினார்.

Tags:    

Similar News