உள்ளூர் செய்திகள்

பெண்ணை மிரட்டிய 2 பேர் கைது

Published On 2023-08-02 15:19 IST   |   Update On 2023-08-02 15:19:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜ் என்கிற விஜய்(27), சக்தி(24) ஆகிய 2 பேரும் சேகர் என்பவரை கொலை செய்தனர்.
  • 2 பேரும் சேகரின் மனைவி ரஞ்ஜினி வீட்டிற்கு சென்று கோர்ட்டில் வந்து எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறியும், ஆபாசமாக திட்டியும் மிரட்டி சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் செல்லப்பா என்கிற சேகர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜ் என்கிற விஜய் (27), சக்தி (24) ஆகிய 2 பேரும் கொலை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

நேற்று 2 பேரும் சேகரின் மனைவி ரஞ்ஜினி வீட்டிற்கு சென்று கோர்ட்டில் வந்து எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறியும், ஆபாசமாக திட்டியும் மிரட்டி சென்றனர்.

இதுகுறித்து ரஞ்ஜினி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 

Tags:    

Similar News