உள்ளூர் செய்திகள்

ஆடு திருடிய இரண்டு பேர் கைது

Published On 2023-02-11 15:30 IST   |   Update On 2023-02-11 15:30:00 IST
  • இருவரையும் பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் பழைய பேட்டை கொட்டபெட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் உண்ணாமலை (வயது36). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் லண்டன் பேட்டை பகுதியை சேர்ந்த கிரி, பழைய பேட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரும் உண்ணாமலை வளர்த்து வந்த ஆடுகளை திருடும்போது கையும் களவுமாக பிடிப்பட்டனர்.

இருவரையும் பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது ெதாடர்பாக டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News