உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

Published On 2022-06-25 10:05 GMT   |   Update On 2022-06-25 10:05 GMT
  • வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார்.
  • மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருண், ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் (பொ) ஜெயலட்சுமி, தாமோதரன், தலைமையாசிரியை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த பள்ளியில் பயிலும் மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால்அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.

Tags:    

Similar News