உள்ளூர் செய்திகள்
- மனைவி பிரிந்து சென்றதால் தூய்மை பணியாளர் தற்கொலை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி பொன்மலை கணேசபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாலி (வயது 49).இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர் கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஈஸ்வரி மகன்,மகளுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று விட்டார். பின்னர் வாலி மட்டும் தனியாக பொன்மலையில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் ஈஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வாலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது சகோதரர் ஜெயகோபி பொன்மலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.