உள்ளூர் செய்திகள்
பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல்
- பாலக்கரையில் பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல்
- செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடம் விரைந்து சென்று அந்த கடையில் சோதனையிட்டார். அப்போது அங்கு 6.3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து அந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதன் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்
கடையின் உரிமையாளர் செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.