உள்ளூர் செய்திகள்

மீன் மார்கெட்டில் இருசக்கர வாகனம் திருட்டு

Published On 2023-08-22 14:45 IST   |   Update On 2023-08-22 14:45:00 IST
  • திருச்சி உறையூர் காசி விழுங்கி மீன் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்டது
  • மீன் வாங்குவதற்காக நிறுத்தி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்

திருச்சி,

திருச்சி உறையூர் காசி விழுங்கி மீன் மார்க்கெட் வாசலில் நேற்று காலை 6 மணி அளவில் உறையூர் வாத்துக்காரர் தெரு பகுதியை சேர்ந்த சிதம்பரம் (வயது 53) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீன் வாங்குவதற்காக உறையூர்மார்க்கெட் உள்ளே சென்றார். மீண்டும் திரும்பி வந்த பார்த்தபோது நிறுத்திய இடத்தில் தனது வாகனத்தை காணவில்லை. இது குறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரைப் பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இரு சக்கர வாகனத்தையும், திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News