உள்ளூர் செய்திகள்

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

Published On 2023-11-02 08:59 GMT   |   Update On 2023-11-02 08:59 GMT
  • புதிய அரசு குவாரிகளை இயக்க கோரி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது
  • மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது

திருச்சி,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரம ணியபுரத்தில் பொதுப்ப ணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தொடர் காத்திருப்பு முற் றுகை போராட்டம் மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் நடந்தது.

செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் ஐம்பதாயிரத் துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்க ணக்கான லாரி ஓட்டுனர்க ளின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழு வதும் அதிக எண்ணிக் கையில் புதிய மணல் குவாரி களை இயக்கிட வேண்டும்,

ஒவ்வொரு மணல் குவா ரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு லோடு செய்ய அனுமதிக்க வேண் டும்,

மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின் போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண் டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோரிக்கை களை நிறைவேற்றாவிட் டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News