உள்ளூர் செய்திகள்
திருச்சியில் மாநகராட்சி பெண் ஊழியரின் மகன் ஆசிட் குடித்து தற்கொலை
- குடிபோதைக்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை .
- மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
திருச்சி
திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மனைவி இந்திரா (வயது 57 ).
இவர் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார் .இவரது மகன் பாலாஜி ( 27 ). குடிபோதைக்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை .இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.